Saturday, January 8, 2011

இயேசுவின் திருமுழுக்கு விழா


எசா 42:1-4,6-7, திப 10:34-38, மத் 3:13-17
இன்றைய இயேசுவின் திருமுழுக்கு திருவிழாவுடன் கிறிஸ்துபிறப்பு காலம் முடிவுக்கு வருகின்றது. ஆனால் இனி வரக்கூடிய திருவழிபாட்டுக் காலம் முழுவதும் நாம் எப்படிப் பட்ட கிறிஸ்தவர்களாக வாழவேண்டும் என்பதை இத்திருவிழா நமக்குச் சொல்லித் தருகின்றது.
ஒரே கடவுளின் மூன்று ஆட்களும் பிரசன்னமாகி இருக்கிற மிக முக்கியமான விவிலியபகுதியை தியாணிக்க அழைக்கிறது இன்றைய திருவிழா.
இயேசு யார் என்ற இயேசுவின் அடையாளத்தையும், இயேசுவின் வாழ்வு எப்படி இருக்கும் என்ற இயேசுவின் பணியையும் இவ்விழா தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக இத்திருவிழா நமது திருமுழுக்கு வாழ்வினை, கிறிஸ்தவ வாழ்வினை திரும்பிப் பார்க்க, அலசிப்பார்க்க அழைக்கின்றது. நமது வாழ்வினைக் கண்டு இறைவன், ‘இவரே என் அன்பார்ந்த மகன்/மகள், இவரில் நான் பூரிப்பு அடைகிறேன்என்று சொல்லுவாரா?
இன்று வாழுகின்ற வாழ்வை வைத்து கிறிஸ்தவர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.
  1. வார்த்தை கிறிஸ்தவர்கள்: நம்மில் பலர் கிறிஸ்தவத்தைப் பற்றியும், கிறிஸ்துவைப் பற்றியும் அதிகமாக பேசுவதில் வல்லவர்கள். திருச்சபையின் எல்லாவிதமான போதனைகளையும், கோட்பாடுகளையும், நிலைப்பாடுகளையும் தெரிந்து கொள்ளுவதிலும், பேசுவதிலும், எழுதுவதிலும் மட்டுமே ஆர்வம் காட்டுபவர்கள்
  2. வாடிக்கை கிறிஸ்தவர்கள்: கிறிஸ்தவர்களாக பிறந்து விட்டோம் என்பதற்காக, எந்த ஒரு பிடிப்பும் இன்றி  சமூதாயத்திற்காகவும், அந்தஸ்துக்காகவும் கிறிஸ்தவர்களாக வாழ்பவர்கள். கிறிஸ்தவ மதிப்பீடுகள் பற்றியோ, சாட்சிய வாழ்வு பற்றியோ கவலைப்பட மாட்டார்கள். கிறிஸ்துவத்தின் சட்ட திட்டங்களுக்கும், பங்கின் சட்ட திட்டங்களுக்கும் கட்டுபட்டு நடப்பர்.
  3. வழிபாட்டு கிறிஸ்தவர்கள்: ஆலயத்தில் நடைபெறும் அனைத்து வழிபாடுகளிலும் தவறாது இவர்கள் பங்கு பெறுவர். பங்கின் செயல்பாடுகளிலும், வழிபாடுபாடுகளிலும் அதிகமான ஈடுபாடு காட்டுவார்கள். ஆனால் பெரும்பாலும் அவைகளில் தனிப்பட்ட தேவைகளும், சுயநலமும் கலந்திருக்கும்.
  4. வாழ்க்கை கிறிஸ்தவர்கள்: தங்களின் வாழ்வு கிறிஸ்துவை பிரதிபலிக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுபவர்கள். பேச்சும் செயல்பாடுகளும் இயேசுவுக்கு சாட்சியமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை எடுப்பவர்கள். மொத்தத்தில் இயேசுவை வெறும் வார்த்தைகளிலோ அடையாளச் சின்னங்களிலோ மட்டுமே வெளிப்படுத்த நினைக்காமல் வாழ்க்கையில் வெளிப்படுத்த நினைப்பவர்கள்.
இந்த நான்கு வகையான வாழ்வு முறைகளில் திருமுழ்நாம் எந்த வகையான கிறிஸ்தவ வாழ்வு வாழ்கிறோம்?
இன்றைய முதல் வாசகம்  நீதி நெறிக்காக வாழ்பவருக்கு இறைவனின் ஆதரவும், அவருக்காக பூரிப்பும் அடைவதாக கூறுகிறது. அப்படி எனில் திருமுழுக்கு பெற்றவரின் வாழ்வும் நீதியை வாழுகின்ற, தேடுகின்ற, கொணர்கின்ற வாழ்வாக அமைந்திட வேண்டும்.
பென்சி sss
08.01.11

No comments:

Post a Comment

 
;