Sunday, April 24, 2011 0 comments

Happy Easter

Wishing you all a very happy Easter....

Kindly use the link to listen to the homily

http://www.4shared.com/audio/OjS8ZFx0/Easter.html

Thank you

Benzi sss
Friday, April 22, 2011 0 comments

புனித வெள்ளி

பலியாகிட...

Live-ஆக recordசெய்யப்பட்ட எனது மறையுரை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

http://www.4shared.com/audio/1BfgKFQW/Good_Friday.html



பென்சி sss

Thursday, April 21, 2011 0 comments

புனித வியாழன்


பணி புரிய...

இன்றைய தினம் மூன்று நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவர அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
           
        1. குருத்துவம்
                      இறைவனைக் காட்டுகின்ற மனித முகங்களே குருத்துவம்
                    2. நற்கருணை
                    தனது நினைவாக உலகில் விட்டுச்சென்ற இறைவனின் கொடை

                    3. பணிவிடை / தாழ்ச்சி
                     நற்கருணை வாழ்வு
                    இச் சவால்களை வாழ்வாக்கிடவே இன்றைய வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கின்றது
                    பென்சி sss
                    Friday, April 15, 2011 0 comments

                    குருத்து / பாடுகளின் ஞாயிறு



                    இன்றைய வழிபாடுகளும், நற்செய்தி நிகழ்வுகளும் நம்மை இயேசுவின் பாடுகள், இறப்பு உயிர்ப்புக்கு தயாரிக்கும் விதமாக அமைகின்றன. அதுமட்டுமின்றி வாழ்வின் தத்துவங்களையும் நமக்கு சொல்லித்தருகின்றது.

                    1.      ஆரவாரத்தோடு வெற்றி மனிதராக இயேசு எருசலேமிற்குள் பவனியாக நுழைந்தாலும், குற்றவாளியாக கல்வாரி நோக்கிய இயேசுவின் சிலுவை பவனியையும் இன்றைய நற்செய்தி நமக்கு காட்டுகின்றது...
                    ·        வாழ்வின் வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும், உயர்வும் தாழ்வும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற வாழ்வின் தத்துவத்தை இது விளக்குகின்றது.

                    2.      'ஓசான்னா’ என்றுஆர்ப்பரித்த அதே மக்கள் தான் ‘சிலுவையில் அறையும்’ என்று கூக்குரலிட்டனரா என்பது நமக்குத் தெரியாது.
                    ·        ஆனால் நமக்கு சாதகமானவர்களும் இருப்பார்கள், பாதகம் விளைவிப்பவர்களும் இருப்பார்கள். முன்னேற்றத்திற்கு துணையாகவும் சிலர் இருப்பர் நட்டாற்றில் விட்டுச்செல்வோரும் இருப்பர். நம்மை ஏற்றுக்கொள்வோரும் இருப்பர் தூற்றுவோரும் இருப்பர் என்பதையும் இன்றைய நற்செய்தி சுட்டிக் காட்டுகின்றது.

                    3.      உயிர்ப்பு ஞாயிறுக்கு முன்பாக வருகின்ற இந்த  ‘பாடுகளின்’ ஞாயிறு பாடுகளை, சிலுவைகளை, துன்பங்களை, அவமானங்களை, இழிசொற்களை கடந்து சென்றால் தான் உயிர்ப்பு வாழ்வு கிடைக்கப் பெறும் என்ற ‘No pain no gain’ வாழ்க்கை தத்துவத்தை சுட்டிக் காட்டுகின்றது.

                    ஆக புனித வார நிகழ்வுகளுக்கு தயாரிக்க அழைப்பு விடுக்கின்ற இந்த குருத்து / பாடுகளின் ஞாயிறு வழிபாடு தருகின்ற வாழ்க்கை தத்துவங்களை மனதில் நிறுத்துவோம், வாழ்வை எதிர் கொள்வோம்.
                    பென்சி sss
                    Saturday, April 9, 2011 0 comments

                    தவக்காலம் 5-ம் ஞயிறு

                    உயிர் கொடுப்போம்
                    பாஸ்கா விழாவை கொண்டாடுவதற்காக எருசலேம் சென்று கொண்டிருக்கும் போதுதான் வழியில் பெத்தானியாவில் இயேசு, இறந்து போய் நான்கு நாட்கள் ஆகியிருந்த லாசருக்கு உயிர் கொடுக்கின்றார்.
                    எருசலேமில் தனது உயிர் எடுக்கப்படும் என்று தெரிந்திருந்தாலும் சிறிதும் கலக்கமின்றி பிறருக்கு உயிர் கொடுக்கும் இயேசு மீண்டும் ஒரு முறை தனது பிறரண்பை வெளிப்படுத்துகின்றார்.
                    இயேசு லாசருக்கு நாம் நினைக்கின்ற வாழ்வதற்கான வெறும் உயிரை மட்டும் கொடுக்கவில்லை, மாறாக அதையும் கடந்து எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உயிரையும் கொடுக்கின்றார்.
                    இறந்து போன லாசரின் உடல் துணிகளால் சுற்றி கட்டப்பட்டிருந்தது. உண்மையான லாசர் துணிகளால் மறைக்கப்பட்டிருந்தார். இயேசுவோ கட்டுகளை அவிழ்த்துவிட கட்டளையிடுகின்றார். வாழ்க்கையில் தான் நல்லவன், அறிவாளி, உயர்ந்தவன் என்று நாம் அணிந்திருக்கின்ற பல முகமூடிகளை  அகற்றி உண்மையான ‘ நான்’ ஐ வெளிக்கொணர்ந்திட வேண்டிய ‘சுய மதிப்பு’ என்ற உயிரை இயேசு தருகின்றார்.
                    லாசரின் கல்லறை மிகப் பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது. இயேசு அக்கல்லை அப்புறப்படுத்த கட்டளையிடுகின்றார். பிறரது ஏச்சுக்கள், பேச்சுக்கள், கேலிகள், நமது தாழ்வு மனப்பான்மை என்ற பல்வேறு கற்கள் நம்மை வளரவிடாது தடுத்துக் கொண்டிருக்கலாம். அவற்றை நகர்த்தி விட்டு வெளிவர இயேசு  ‘தன்னம்பிக்கை’ என்ற உயிரைத் தருகின்றார்.
                    கல்லறையில் இருந்த லாசரை ‘லாசரே வெளியே வா’ என்று இயேசு அழைக்கின்றார். நம்மை நாமே பல்வேறு காரணங்களால் தனிமைப் படுத்திக் கொண்டு பிறரோடும் சமூகத்தோடும் எவ்வித உறவுமின்றி ‘பயம்’ என்ற கல்லறையில் இருக்கின்ற நாம், வெளியே வர இயேசு ‘ துணிவு’ என்ற உயிர் கொடுக்கின்றார்.
                    ஆக இயேசு தருகின்ற உயிர் வாழ்வதற்கானது மட்டுமன்றி எப்படி வாழவேண்டும் என்பதற்கானதுமாகும்.
                    இன்றும் சுயமதிப்பின்றி, தன்னம்பிக்கையின்றி அச்சம் கொண்டு உயிரற்று பல லாசர்கள் நம்மிடையே இருக்கின்றனர்.
                    இவர்களுக்கு சுயமதிப்பு கொடுக்கும் போது
                    தன்னம்பிக்கை கொடுக்கும் போது
                    துணிவு கொடுக்கும் போது
                    நாமும் பிறருக்கு அர்த்தமுள்ள நல்வாழ்வு வாழ உயிர் கொடுக்கிறோம்.
                    இத்தவக்காலம் உயிரளிக்கும் காலமாக அமையட்டும்

                    பென்சி sss
                    Saturday, April 2, 2011 0 comments

                    தவக்காலம் 4-ம் ஞயிறு

                    பார்வை
                    1சாமு 16:1,6-7,10-13   எபே 5:8-14  யோவான் 9:1-41
                    நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் வகுப்பு முடிந்து மாலையில் நுங்கம்பாக்கத்தில் இருந்து வேலப்பன் சாவடிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். பேருந்திலோ சென்னை நகரத்திற்கே உரிய கூட்ட நெரிசல். ஓட்டுனரோ பணிக்கு புதியவராய் இருந்திருப்பார் என்று நினைக்கின்றேன் காரணம் ஒவ்வொரு முறை பேருந்தை நிறுத்தும் போதும் break-ஐ  sudden break-ஆக apply பண்ணியதால் பயணிகள் ஒவ்வொரு முறையும் நிலை தடுமாறினர். பெண்கள் குறிப்பாக முதியோர் அதிகம் கஷ்டப்பட்டனர். பயணிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டாலும் ஓட்டுனரை யாரும் எதுவும் சொல்லவில்லை.
                    ஆனால் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நடுத்தர மனிதர் ஒருவர் ஒட்டுனரை கவனமாக வண்டியை ஓட்ட சத்தம் போட்டு சொன்னார். ஆனாலும் ஒவ்வொரு நிறுத்தத்திலும் பயணிகள் நிலை தடுமாறுவது தொடர்ந்து கொண்டே இருந்தது. முன் இருக்கையில் அமர்ந்து இருந்தவரோ குரலை இன்னும் அதிகமாக உயர்த்தி ஓட்டுனரை திட்டவும் விவாதிக்கவும் ஆரம்பித்தார். பதிலுக்கு ஓட்டுனரும் சத்தம் போட தொடங்கினார்.
                    ஓட்டுனரின் பேரில் தான் தவறு என்று பயணிகள் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் ஓட்டுனரை எதிர்த்து பேச அந்த ஒரு மனிதரைத் தவிர வேறு யாரும் (நான் உட்பட)  முன் வரவில்லை.
                    நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது. கீழே இறங்கியதும் முன்னிருக்கையில் அமர்ந்து ஓட்டுனரின் தவறை தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கொண்டே வந்த அம்மனிதரின் முகத்தைக் காண்பதற்காக பேருந்தின் முன்புறம் வந்தேன்.
                    கீழே இருந்து பார்த்த போது அம்மனிதரின் முகம் கண்ணாடி வழியே தெளிவாக தெரிந்தது. அவரின் முகத்தைப் பார்த்த உடன் மிகப் பெரிய அதிர்ச்சி அடைந்தேன். தலையை குணிந்தவாறே எனது பயிற்சி இல்லம் வந்து சேர்ந்தேன்.
                    பல நாட்கள் அவரின் முகம் என் நினைவுக்கு அடிக்கடி வந்து கொண்டே இருந்தது. இந்நிகழ்வு நடந்து 15ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் அவரது முகம் நினைவில் தெளிவாகவே இருக்கின்றது. காரணம் அவர் ஓர் பார்வையற்றவர்.
                    அவரை பார்வையற்றவர் என்று சொல்ல என்னால் இயலவில்லை. உண்மையில் அன்று பேருந்தில் அவரைத்தவிர மற்ற அனைவரும் தான் பார்வையற்றவர்கள்.
                    இன்றைய நற்செய்தியில் பல மனிதர்கள் வருகின்றார்கள்.  வாசகத்தை வாசிக்கும் போது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கூர்ந்து கவனித்தோம் என்றால் பார்வையற்றவர் யார் பார்வை பெற்றவர் யார் என்ற உண்மை மிகத் தெளிவாக நமக்கு புலப்படும்.
                    • யாருடைய பாவத்தினால் பிறவியிலிருந்தே இவன் குருடனாய் இருக்கின்றான் என்று கேள்விகள் கேட்கின்ற சீடர்கள் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:2).
                    • பார்வைபெற்றவனை,  ‘பார்வையற்று பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவன் இவன்’ என்று இன்னமும் சொல்லிக்கொண்டிருந்த அக்கம் பக்கத்து மனிதர்கள் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:8).
                    • மனிதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த பரிசேயர்கள் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:16).
                    • பிறருக்குப் பயந்து உண்மையைக் கூறாமல் பொறுப்பை தட்டிக் கழித்த பார்வை பெற்ற மனிதனின் பெற்றோர் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:23).
                    • உண்மையை நம்பாமல் திரும்ப திரும்ப உண்மைக்குப் புறம்பாக சாட்சி சொல்ல வற்புறுத்திய யூதர்கள் உண்மையில் பார்வையற்றவர்கள். (யோவான் 9:24).
                    ஆனால்
                    இயேசுவை மனிதர் என்றும் (யோவான் 9:11)  
                    இறைவாக்கினர் என்றும் (யோவான் 9:17)
                    ஆண்டவர் என்றும் (யோவான் 9:38)
                    உணர்ந்து கொண்தோடு மட்டுமன்றி பிறருக்கும் பறைசாற்றிய பார்வையற்ற அம்ம்னிதனே உண்மையில் பார்வை பெற்றவன்.
                    இயேசு தருவது புறப்பார்வையையும் கடந்த அகப்பார்வை.
                    v  மனிதனின் கஷ்டங்களும் நஷ்டங்களும் பாவத்தின் காரணமாய் அல்ல கடவுளின் செயல் இவை வழியாக வெளிப்படவே நடக்கிறது என்ற அகப்பார்வையை இயேசு தருகிறார் (யோவான் 9:3).
                    v  மதிப்பே இல்லாத சேற்றின் உதவியால் மதிப்பற்ற பார்வைகொடுத்து, எதற்குமே உதவாதது, முக்கியத்துவம் அற்றது என்று எதுவுமே இல்லை என்ற அகப்பார்வையை இயேசு தருகிறார் (யோவான் 9:6).
                    v  சட்டங்களை விட மனித நேயமும், மாண்பும் உயர்ந்தது என்ற அகப்பார்வையை இயேசு தருகிறார் (யோவான் 9:14).
                    இறைவா
                    இத்தவக்காலத்தில்
                    என் கண்களைத் திறந்தருளும்.
                    அகப்பார்வையை தந்தருளும்.
                    நீரே ஆண்டவர் என பறை சாற்ற வரம் தாரும்.
                    மனித நேயத்தையும், மாண்பையும் காக்க உறுதி தாரும்.
                    உயர்வும் தாழ்வும் உம்மை வெளிப்படுத்தும் அனுபவங்களே என்பதை உணரச்செய்யும்.     
                    ஆமென்.

                    பென்சி sss
                     
                    ;