Saturday, May 28, 2011 0 comments

6-ம் உயிர்ப்பு ஞாயிறு

இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனுமே அன்பில் வாழ ஆசைப்படுகின்றான்
தான் அன்பு செய்யவும் தன்னை அன்பு செய்யவும் உண்மையான ஓர் உயிருக்காக ஒவ்வொரு உயிரினமும் ஏங்கிக் கொண்டிருக்கின்றது
நிலையான அன்பு, நிறைவான அன்பு, நிபந்தனையற்ற அன்பு இறைவன் ஒருவனிடம் தான் உள்ளது என்பதை அனைவரும் அறிந்திருக்கின்றோம்
நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் இறைவன் நம்மை தொடர்ந்து அன்பு செய்து கொண்டே இருக்கின்றார்.
ஆனால் நாம் அவர் மீது அன்பு கொண்டிருக்கின்றோமா?
நாம் அவர் மீது கொண்டிருக்கின்ற அன்பிற்கு சாட்சி என்ன என்பதைத் தான் இன்றைய நற்செய்தி நமக்கு கூறுகின்றது
 “நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளை கடைபிடிப்பீர்கள்” 14:15
இறைவனின் கட்டளைகளை கடைபிடிப்பதில் தான், நாம் அவர் மீது கொண்டுள்ள அன்பு வெளிப்படுத்தப் படுகின்றது
இயேசு தந்த ஒவ்வொரு கட்டளைகளுமே அன்பை வெளிப்படுத்துகின்ற செயல்களே (Love in action)
ஆக அன்பை வெளிப்படுத்துகின்ற, அன்பை மையப்படுத்துகின்ற எல்லா செயல்களும் இறைவனின் கட்டளைகளை கடைபிடிப்பதை உணர்த்துகின்றது
இறைவனின் கட்டளைகளை கடைபிடிக்கும் போது நாம் அவர் மீது கொண்டிருக்கும் அன்பு வெளிப்படுத்தப் படுகின்றது...

பென்சி sss
Saturday, May 21, 2011 0 comments

5-ம் உயிர்ப்பு ஞாயிறு

தி. பணி 6:1-7   1பேதுரு 2:4-9    யோவான் 14:1-12
நானே வழி, நானே உண்மை, நானே வாழ்வு

? எனக்கு மட்டும் அந்த நேரத்தில் ஒரு நல்ல வழி கிடைச்சிருந்தா என் வாழ்க்கை இன்று இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது...
? எது உண்மை, எது பொய், எது சரி, எது தவறு என்று எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை...
?என்ன செய்தால், எப்படி இருந்தால் நிலை வாழ்வு கிடைக்கும் என்று யாராவது சொல்லித் தந்தால் நன்றாக இருக்கும்...
வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பல சந்தர்ப்பங்களில் சொல்லிக் கொள்ளும் வாக்கியங்கள் இவை.
இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையாகத்தான் இயேசு நானே வழி, நானே உண்மை, நானே வாழ்வு என்கிறார். ஆக வழியும், உண்மையும், வாழ்வும் தேவையென்றால் அவரையே நாட வேண்டும்.
ஆனால் இன்று எப்படி நமது வாழ்வில் அவரது வழியை, உண்மையை, வாழ்வை பெறுவது?
கேள்வி கடினமாக இருப்பினும் விடை மிக எளிது...
கலங்கி நிற்கும் போது நாம் ஒரே ஒரு கேள்வியை கேட்க வேண்டும்
“எனது இடத்தில் இயேசு  இன்று இருந்தால் என்ன செய்திருப்பார்? என்ன பேசியிருப்பார்? என்ன முடிவுகள் எடுத்திருப்பார்?”
இந்த கேள்விகளைக் கேட்டு, கிடைக்கின்ற விடைகளின் படி வாழ்க்கையை நடத்தினால் அவரது வழியில், அவரது உண்மையை, அவரது வாழ்வைப் பெறலாம்     
பென்சி sss
Saturday, May 7, 2011 0 comments

3-ம் உயிர்ப்பு ஞாயிறு

எம்மாவுஸ் தரும் பாடங்கள்...
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் உயிர்ப்பை பற்றி கூறுகின்ற பகுதிகளில் அதிகமானோருக்கு தெரிந்த, பெரும்பாலானோருக்கு பிடித்தமான அர்த்தம் தருகின்ற ஒரு பகுதியாகும். இப்பகுதி சொல்லுகின்ற / தருகின்ற செய்திகள் மிகவும் ஆழமானவை.
v  உயிர்த்த இயேசு நம்மோடும் உடன் நடந்து வருகின்றார். ஆனால் நமது குழப்பங்களும், கலக்கங்களும் அவரை மறைத்துவிடுகின்றன.
v  மனித அறிவுக்கு / மனங்களுக்கு புரியாத பல விக்ஷயங்களை புரிய வைப்பவர் இயேசு ஒருவரே.
v  நமது கண்கள் திறந்திட நம்முடன் வருகின்றார். ஆனால் நமது அழைப்புக்காக காத்து நிற்கின்றார். காரணம் அவர் நமது சுதந்திரத்தை மதிக்கின்றார்.
v  பகிர்விற்காக உடைக்கப்படும், உடைபடும் ஒவ்வொன்றும் இயேசுவின் பிரசன்னத்தை நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
v  இயேசுவை அனுபவித்தவர்கள், அவர் பிரசன்னத்தை உணர்ந்தவர்கள் தங்களுக்குள்ளே வைத்திருக்க மாட்டார்கள்.
உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தை நாமும் உணர்ந்திட, பிறருக்கும் உணர்த்திட எம்மாவுஸ் தரும் பாடங்களை நமது வாழ்வாக்குவோம்.
பென்சி sss
 
;