Wednesday, February 22, 2012

விபூதி புதன் 2012

தவக்காலம்

சோகத்தின் காலமல்ல

அழுகையின் காலமல்ல

மாறாக

அருளின் காலம்

அன்பின் காலம்

ஆம் – இது

இதயத்தை பழுது பார்க்கும் காலம்

உறவுகளை சீர்படுத்தும் காலம்

இறைவனில் மகிழும் காலம்.


முடக்குவாதக் காரனால் இயேசுவிடம் செல்ல முடியவில்லை

அவனை இயேசுவிடம் அழைத்துச் செல்ல

நோய் குணமாகிட நால்வர் தேவைப் பட்டனர்.

இன்று நாமும்

பல்வேறு வகையான ஆன்மீக முடக்கு வாதங்களினால்

கடவுளிடம் செல்ல முடியாமல்

வெகு தொலைவில் நின்று கொண்டிருக்கின்றோம்.

திருச்சபையின் வழியில், திருச்சபையின் உதவியில்

கடவுளோடு இனைந்திட இருந்திட முயற்ச்சி எடுப்போம்.


பென்சி sss

No comments:

Post a Comment

 
;