இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனுமே அன்பில் வாழ ஆசைப்படுகின்றான்
தான் அன்பு செய்யவும் தன்னை அன்பு செய்யவும் உண்மையான ஓர் உயிருக்காக ஒவ்வொரு உயிரினமும் ஏங்கிக் கொண்டிருக்கின்றது
நிலையான அன்பு, நிறைவான அன்பு, நிபந்தனையற்ற அன்பு இறைவன் ஒருவனிடம் தான் உள்ளது என்பதை அனைவரும் அறிந்திருக்கின்றோம்
நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் இறைவன் நம்மை தொடர்ந்து அன்பு செய்து கொண்டே இருக்கின்றார்.
ஆனால் நாம் அவர் மீது அன்பு கொண்டிருக்கின்றோமா?
நாம் அவர் மீது கொண்டிருக்கின்ற அன்பிற்கு சாட்சி என்ன என்பதைத் தான் இன்றைய நற்செய்தி நமக்கு கூறுகின்றது
“நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளை கடைபிடிப்பீர்கள்” 14:15
இறைவனின் கட்டளைகளை கடைபிடிப்பதில் தான், நாம் அவர் மீது கொண்டுள்ள அன்பு வெளிப்படுத்தப் படுகின்றது
இயேசு தந்த ஒவ்வொரு கட்டளைகளுமே அன்பை வெளிப்படுத்துகின்ற செயல்களே (Love in action)
ஆக அன்பை வெளிப்படுத்துகின்ற, அன்பை மையப்படுத்துகின்ற எல்லா செயல்களும் இறைவனின் கட்டளைகளை கடைபிடிப்பதை உணர்த்துகின்றது
இறைவனின் கட்டளைகளை கடைபிடிக்கும் போது நாம் அவர் மீது கொண்டிருக்கும் அன்பு வெளிப்படுத்தப் படுகின்றது...
பென்சி sss

No comments:
Post a Comment