Friday, December 31, 2010

என்னுரை...முன்னுரையும் கூட...

வார்த்தையாம் இறைவன் மனிதர்கள்ளும் மனிதர்களோடும்
வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பதை அழுத்திச் சொல்லவும்
இறைவார்த்தை இன்று நம் வாழ்வியல் ஆகிடவேண்டும்
என்பதை உரக்கச்சொல்லவும்
நான் எடுத்துள்ள சிறு முயற்சியே
இந்த தளம்...

இறைவனின் வார்த்தை வாழ்வை மையப்படுதிய
வாழ்வியல் வார்த்தை – ஆனால்
காலப்போக்கில்
இறைவனை மட்டுமே மையப்படுதிய
இறையியலாக மாறிவிட்டது.
இறையியல் அற்ற வாழ்வியல் உலகில் பல காணக்கிடக்கின்றது
அர்த்தம் தருபவையாகவும் உள்ளன.
ஆனால்
வாழ்வியல் அற்ற இறையியல் அர்த்தமற்றவை மட்டுமல்ல
தேவையற்றவையும் கூட.
ஆக
எனது இந்த இறைவார்த்தை சிந்தனையில்
நீங்கள் தேடும் இறையியல் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் கண்டிப்பாக
நமக்கு தேவையான வாழ்வியல் இருக்கும் என்பதற்கு
நான் உத்திரவாதம்

உங்கள் கருத்துக்களால் நான் காயப்படமாட்டேன்
ஆனால்
எனது பார்வையை கூராக்க அவை உதவிடும்
ஆகவே உங்கள் கருத்துக்களையும்
அவ்வப்போது பதிவு செய்ய அழைக்கிறேன்

இந்த தளம்
இறைவார்த்தையோடு நம்மையும்
உங்களோடு என்னையும் இணைத்திடட்டும்.

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
பென்சி sss

No comments:

Post a Comment

 
;